அறத்துப்பால் · துறவறவியல் · வாய்மை

குறள் 292வாய்மை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்தநன்மை பயக்கு மெனின்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

குற்றமற்ற நன்மையை விளைவிக்கக் கூடுமானால் பொய்யான சொல்லும்கூட வாய்மை என்று கூறத்தக்க இடத்தைப் பெற்றுவிடும்.

மூலம் · அச்சுப் பக்கம் 59 · ஸ்கேன் 92 · மூலமும் சான்றும்