அறத்துப்பால் · துறவறவியல் · வாய்மை

குறள் 294வாய்மை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்உள்ளத்து ளெல்லாம் உளன்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

மனத்தால்கூடப் பொய்யை நினைக்காமல் வாழ்பவர்கள், மக்கள் மனத்தில் நிலையான இடத்தைப் பெறுவார்கள்.

மூலம் · அச்சுப் பக்கம் 59 · ஸ்கேன் 92 · மூலமும் சான்றும்