அறத்துப்பால் · இல்லறவியல்
15. பிறனில் விழையாமை
குறள் 141–150
- குறள் 141பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்தறம்பொருள் கண்டார்க ணில்.
- குறள் 142அறன்கடை நின்றாரு ளெல்லாம் பிறன்கடைநின்றாரிற் பேதையா ரில்.
- குறள் 143விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்தீமை புரிந்தொழுகு வார்.
- குறள் 144எனைத்துணைய ராயினும் என்னாந் தினைத்துணையும்தேரான் பிறனில் புகல்.
- குறள் 145எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்விளியாது நிற்கும் பழி.
- குறள் 146பகையாவும் அச்சம் பழியென நான்கும்இகவாவாம் இல்லிறப்பான் கண்.
- குறள் 147அறனியலான் இல்வாழ்வா னென்பான் பிறனியலாள்பெண்மை நயவா தவன்.
- குறள் 148பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கறனொன்றோ ஆன்ற வொழுக்கு.
- குறள் 149நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்பிறற்குரியாள் தோள்தோயா தார்.
- குறள் 150அறன்வரையா னல்ல செயினும் பிறன்வரையாள்பெண்மை நயவாமை நன்று.