அறத்துப்பால் · இல்லறவியல் · பிறனில் விழையாமை

குறள் 149பிறனில் விழையாமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்பிறற்குரியாள் தோள்தோயா தார்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

பிறன் மனைவியின் தோளைத் தீண்டாதவரே கடல் சூழ் இவ்வுலகின் பெருமைகளை அடைவதற்குத் தகுதியுடையவர்.

மூலம் · அச்சுப் பக்கம் 30 · ஸ்கேன் 63 · மூலமும் சான்றும்