அறத்துப்பால் · இல்லறவியல்

16. பொறையுடைமை

குறள் 151160
  1. குறள் 151
    அகழ்வாரைத் தாங்கும் நிலம் போலத் தம்மைஇகழ்வார்ப் பொறுத்தல் தலை.
  2. குறள் 152
    பொறுத்த லிறப்பினை யென்றும் அதனைமறத்த லதனினும் நன்று.
  3. குறள் 153
    இன்மையு ளின்மை விருந்தொரால் வன்மையுள்வன்மை மடவார்ப் பொறை.
  4. குறள் 154
    நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமைபோற்றி யொழுகப் படும்.
  5. குறள் 155
    ஒறுத்தாரை யொன்றாக வையாரே வைப்பர்பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.
  6. குறள் 156
    ஒறுத்தார்க் கொருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்பொன்றுந் துணையும் புகழ்.
  7. குறள் 157
    திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்தறனல்ல செய்யாமை நன்று.
  8. குறள் 158
    மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தந்தகுதியான் வென்று விடல்.
  9. குறள் 159
    துறந்தாரின் தூய்மை யுடையர் இறந்தார்வாய்இன்னாச்சொல் நோற்கிற் பவர்.
  10. குறள் 160
    உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்இன்னாச்சொ நோற்பாரிற் பின்.