அறத்துப்பால் · இல்லறவியல் · பொறையுடைமை

குறள் 152பொறையுடைமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

பொறுத்த லிறப்பினை யென்றும் அதனைமறத்த லதனினும் நன்று.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

அளவுகடந்து செய்யப்பட்ட தீங்கைப் பொறுத்துக் கொள்வதைக் காட்டிலும், அந்தத் தீங்கை அறவே மறந்து விடுவதே சிறந்த பண்பாகும்.

மூலம் · அச்சுப் பக்கம் 31 · ஸ்கேன் 64 · மூலமும் சான்றும்