இன்பத்துப்பால் · கற்பியல்
130. நெஞ்சொடு புலத்தல்
குறள் 1291–1300
- குறள் 1291அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சேநீயெமக் காகா தது.
- குறள் 1292உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்செறாஅரெனச் சேறியென் நெஞ்சு.
- குறள் 1293கெட்டார்க்கு நட்டாரில் என்பதோ நெஞ்சேநீபெட்டாங் கவர்பின் செலல்.
- குறள் 1294இனியன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சேதுனிசெய்து துவ்வாய்காண் மற்று.
- குறள் 1295பெறாஅமை அஞ்சும் பெறின்பிரி வஞ்சும்அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு.
- குறள் 1296தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்தினிய இருந்ததென் நெஞ்சு.
- குறள் 1297நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாவென்மாணா மடநெஞ்சிற் பட்டு.
- குறள் 1298எள்ளின் இளிவாமென் றெண்ணி அவர்திறம்உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.
- குறள் 1299துன்பத்திற் கியாரே துணையாவார் தாமுடையநெஞ்சந் துணையல் வழி.
- குறள் 1300தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடையநெஞ்சம் தமரல் வழி.