இன்பத்துப்பால் · கற்பியல்

131. புலவி

குறள் 13011310
  1. குறள் 1301
    புல்லா திராஅப் புலத்தை அவருறும்அல்லல்நோய் காண்கம் சிறிது.
  2. குறள் 1302
    உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிதுமிக்கற்றால் நீள விடல்.
  3. குறள் 1303
    அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்புலந்தாரைப் புல்லா விடல்.
  4. குறள் 1304
    ஊடி யவரை உணராமை வாடியவள்ளி முதலரிந் தற்று.
  5. குறள் 1305
    நலத்தகை நல்லவர்க் கேஎர் புலத்தகைபூவன்ன கண்ணார் அகத்து.
  6. குறள் 1306
    துனியும் புலவியும் இல்லாயின் காமம்கனியும் கருக்காயும் அற்று.
  7. குறள் 1307
    ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வதுநீடுவ தன்றுகொல் என்று.
  8. குறள் 1308
    நோதல் எவன்மற்று நொந்தாரென் றஃதறியும்காதலர் இல்லா வழி.
  9. குறள் 1309
    நீரும் நிழல திணிதே புலவியும்வீழுநர் கண்ணே இனிது.
  10. குறள் 1310
    ஊடல் உணங்க விடுவாரோ டென்னெஞ்சம்கூடுவேம் என்ப தவா.