இன்பத்துப்பால் · கற்பியல் · புலவி

குறள் 1310புலவி

திருவள்ளுவர் இயற்றிய குறள்

ஊடல் உணங்க விடுவாரோ டென்னெஞ்சம்கூடுவேம் என்ப தவா.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

ஊடலைத் தணிக்காமல் வாடவிட்டு வேடிக்கை பார்ப்பவருடன் கூடியிருப்போம் என்று என் நெஞ்சம் துடிப்பதற்கு அதன் அடங்காத ஆசையே காரணம்.

மூலம் · அச்சுப் பக்கம் 266 · ஸ்கேன் 299 · மூலமும் சான்றும்