குறள் 1302 — புலவி
திருவள்ளுவர் இயற்றிய குறள்
உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிதுமிக்கற்றால் நீள விடல்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஊடலுக்கும் கூடலுக்கும் இடையில் உள்ள காலம் உணவில் இடும் உப்பு போல் ஓரளவுடன் இருக்க வேண்டும். அந்தக் கால அளவு நீடித்தால் உணவில் உப்பு மிகுதியானதற்கு ஒப்பாக ஆகிவிடும்.
மூலம் · அச்சுப் பக்கம் 265 · ஸ்கேன் 298 · மூலமும் சான்றும்