இன்பத்துப்பால் · கற்பியல் · புலவி

குறள் 1303புலவி

திருவள்ளுவர் இயற்றிய குறள்

அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்புலந்தாரைப் புல்லா விடல்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

ஊடல் கொண்டவரின் ஊடல் நீக்கித் தழுவாமல் விடுதல் என்பது, ஏற்கனவே துன்பத்தால் வருந்துவோரை மேலும் துன்பநோய்க்கு ஆளாக்கி வருத்துவதாகும்.

மூலம் · அச்சுப் பக்கம் 265 · ஸ்கேன் 298 · மூலமும் சான்றும்