இன்பத்துப்பால் · கற்பியல்

128. குறிப்பறிவுறுத்தல்

குறள் 12711280
  1. குறள் 1271
    கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண்உரைக்கல் உறுவதொன் றுண்டு.
  2. குறள் 1272
    கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப்பெண்ணிறைந்த நீர்மை பெரிது.
  3. குறள் 1273
    மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தைஅணியில் திகழ்வதொன் றுண்டு.
  4. குறள் 1274
    முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதைநகைமொக்குள் உள்ளதொன் றுண்டு.
  5. குறள் 1275
    செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர்தீர்க்கும் மருந்தொன் றுடைத்து.
  6. குறள் 1276
    பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றிஅன்பின்மை சூழ்வ துடைத்து.
  7. குறள் 1277
    தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும்முன்னம் உணர்ந்த வளை.
  8. குறள் 1278
    நெருநற்றுச் சென்றாரெங் காதலர் யாமும்எழுநாளேம் மேனி பசந்து.
  9. குறள் 1279
    தொடிநோக்கி மென்றோளும் நோக்கி அடிநோக்கிஅஃதான் டவள்செய் தது.
  10. குறள் 1280
    பெண்ணினாற் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்காமநோய் சொல்லி இரவு.