இன்பத்துப்பால் · கற்பியல்

127. அவர்வயின் விதும்பல்

குறள் 12611270
  1. குறள் 1261
    வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்றநாளொற்றித் தேய்ந்த விரல்.
  2. குறள் 1262
    இலங்கிழாய் இன்று மறப்பினென் தோள்மேல்கலங்கழியும் காரிகை நீத்து.
  3. குறள் 1263
    உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்வரல்நசைஇ இன்னும் உளேன்.
  4. குறள் 1264
    கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்கோடுகொ டேறுமென் நெஞ்சு.
  5. குறள் 1265
    காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்நீங்குமென் மென்தோள் பசப்பு.
  6. குறள் 1266
    வருகமன் கொண்கன் ஒருநாட் பருகுவன்பைதல்நோய் எல்லாம் கெட.
  7. குறள் 1267
    புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்கண்ணன்ன கேளிர் வரின்.
  8. குறள் 1268
    வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்துமாலை அயர்கம் விருந்து.
  9. குறள் 1269
    ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்வருநாள்வைத் தேங்கு பவர்க்கு.
  10. குறள் 1270
    பெறினென்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம்உள்ளம் உடைந்துக்கக் கால்.