இன்பத்துப்பால் · கற்பியல் · அவர்வயின் விதும்பல்

குறள் 1265அவர்வயின் விதும்பல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்நீங்குமென் மென்தோள் பசப்பு.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

கண்ணார என் கணவனைக் காண்பேனாக; கண்டபிறகே என் மெல்லிய தோளில் படர்ந்துள்ள பசலை நிறம் நீங்கும்.

மூலம் · அச்சுப் பக்கம் 257 · ஸ்கேன் 290 · மூலமும் சான்றும்