இன்பத்துப்பால் · கற்பியல்

123. பொழுதுகண்டு இரங்கல்

குறள் 12211230
  1. குறள் 1221
    மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்வேலைநீ வாழி பொழுது.
  2. குறள் 1222
    புன்கண்ணை வாழி மருள்மாலை எங்கேள்போல்வன்கண்ண தோநின் துணை.
  3. குறள் 1223
    பனியரும்பிப் பைதல்கொள் மாலை துனியரும்பித்துன்பம் வளர வரும்.
  4. குறள் 1224
    காதலர் இல்வழி மாலை கொலைக்களத்தேதிலர் போல வரும்.
  5. குறள் 1225
    காலைக்குச் செய்தநன் றென்கொல் எவன்கொல்யான்மாலைக்குச் செய்த பகை.
  6. குறள் 1226
    மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாதகாலை அறிந்த திலேன்.
  7. குறள் 1227
    காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகிமாலை மலருமிந் நோய்.
  8. குறள் 1228
    அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்குழல்போலும் கொல்லும் படை.
  9. குறள் 1229
    பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டுமாலை படர்தரும் போழ்து.
  10. குறள் 1230
    பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலைமாயுமென் மாயா உயிர்.