இன்பத்துப்பால் · கற்பியல்
122. கனவுநிலை உரைத்தல்
குறள் 1211–1220
- குறள் 1211காதலர் தூதொடு வந்த கனவினுக்கியாதுசெய் வேன்கொல் விருந்து.
- குறள் 1212கயலுண்கண் யானிரப்பத் துஞ்சின் கலந்தார்க்குஉயலுண்மை சாற்றுவேன் மன்.
- குறள் 1213நனவினான் நல்கா தவரைக் கனவினால்காண்டலின் உண்டென் உயிர்.
- குறள் 1214கனவினான் உண்டாகும் காமம் நனவினான்நல்காரை நாடித் தற்கு.
- குறள் 1215நனவினாற் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்கண்ட பொழுதே இனிது.
- குறள் 1216நனவென ஒன்றில்லை ஆயின் கனவினாற்காதலர் நீங்கலர் மன்.
- குறள் 1217நனவினான் நல்காக் கொடியார் கனவினான்என்னெம்மைப் பீழிப் பது.
- குறள் 1218துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்நெஞ்சத்தர் ஆவர் விரைந்து.
- குறள் 1219நனவினான் நல்காரை நோவர் கனவினான்காதலர்க் காணா தவர்.
- குறள் 1220நனவினான் நந்தத்தார் என்பர் கனவினான்காணார்கொல் இவ்வூ ரவர்.