இன்பத்துப்பால் · கற்பியல்

121. நினைந்தவர் புலம்பல்

குறள் 12011210
  1. குறள் 1201
    உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்கள்ளினும் காமம் இனிது.
  2. குறள் 1202
    எனைத்தொன் றினிதேகாண் காமந்தாம் வீழ்வார்நினைப்ப வருவதொன் றில்.
  3. குறள் 1203
    நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்சினைப்பது போன்று கெடும்.
  4. குறள் 1204
    யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத் தெந்நெஞ்சத்தோஒ உளரே அவர்.
  5. குறள் 1205
    தம்நெஞ்சத் தெம்மைக் கடிகொண்டார் நாணார்கொல்எம்நெஞ்சத் தோவா வரல்.
  6. குறள் 1206
    மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடியான்உற்றநாள் உள்ள உளேன்.
  7. குறள் 1207
    மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்உள்ளினும் உள்ளம் சுடும்.
  8. குறள் 1208
    எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோகாதலர் செய்யும் சிறப்பு.
  9. குறள் 1209
    விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார்அளியின்மை ஆற்ற நினைந்து.
  10. குறள் 1210
    விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்படாஅதி வாழி மதி.