இன்பத்துப்பால் · கற்பியல் · நினைந்தவர் புலம்பல்

குறள் 1205நினைந்தவர் புலம்பல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

தம்நெஞ்சத் தெம்மைக் கடிகொண்டார் நாணார்கொல்எம்நெஞ்சத் தோவா வரல்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

அவருடைய நெஞ்சில் எமக்கு இடம் தராமல் இருப்பவர்; எம் நெஞ்சில் மட்டும் இடைவிடாமல் வந்து புகுந்து கொள்வதற்காக வெட்கப்படமாட்டார் போலும்.

மூலம் · அச்சுப் பக்கம் 245 · ஸ்கேன் 278 · மூலமும் சான்றும்