இன்பத்துப்பால் · கற்பியல்

120. தனிப்படர் மிகுதி

குறள் 11911200
  1. குறள் 1191
    தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரேகாமத்துக் காழில் கனி.
  2. குறள் 1192
    வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்குவீழ்வார் அளிக்கும் அளி.
  3. குறள் 1193
    வீழுநர் வீழப் படுவார்க் கமையுமேவாழுநம் என்னும் செருக்கு.
  4. குறள் 1194
    வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்வீழப் படாஅர் எனின்.
  5. குறள் 1195
    நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோதாம்காதல் கொள்ளாக் கடை.
  6. குறள் 1196
    ஒருதலையான் இன்னாது காமங்காப் போலஇருதலை யானும் இனிது.
  7. குறள் 1197
    பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்ஒருவர்கண் நின்றொழுகு வான்.
  8. குறள் 1198
    வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்துவாழ்வாரின் வன்கணார் இல்.
  9. குறள் 1199
    நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டஇசையும் இனிய செவிக்கு.
  10. குறள் 1200
    உறாஅர்க் குறுநோய் உரைப்பாய் கடலைச்செறாஅஅய் வாழிய நெஞ்சு.