குறள் 1196 — தனிப்படர் மிகுதி
திருவள்ளுவர் இயற்றிய குறள்
ஒருதலையான் இன்னாது காமங்காப் போலஇருதலை யானும் இனிது.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
காவடித் தண்டின் இரண்டு பக்கங்களும் ஒரே அளவு கனமாக இருப்பதுபோல், காதலும் ஆண், பெண் எனும் இருவரிடத்திலும் மலர வேண்டும்; ஒரு பக்கம் மட்டுமே ஏற்படும் காதலால் பயனுமில்லை. துயரமும் உருவாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 244 · ஸ்கேன் 277 · மூலமும் சான்றும்