இன்பத்துப்பால் · கற்பியல்
119. பசப்புறு பருவரல்
குறள் 1181–1190
- குறள் 1181நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்பண்பியார்க் குரைக்கோ பிற.
- குறள் 1182அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென்மேனிமேல் ஊரும் பசப்பு.
- குறள் 1183சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறாநோயும் பசலையும் தந்து.
- குறள் 1184உள்ளுவன் மன்யான் உரைப்ப தவர்திறமால்கள்ளம் பிறவோ பசப்பு.
- குறள் 1185உவக்காணெம் காதலர் செல்வார் இவக்காணென்மேனி பசப்பூர் வது.
- குறள் 1186விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்முயக்கற்றம் பார்க்கும் பசப்பு.
- குறள் 1187புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்அள்ளிக்கொள் வற்றே பசப்பு.
- குறள் 1188பசந்தாள் இவளென்ப தல்லால் இவளைத்துறந்தார் அவரென்பார் இல்.
- குறள் 1189பசக்கமற் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்நன்னிலையர் ஆவர் எனின்.
- குறள் 1190பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார்நல்காமை தூற்றார் எனின்.