இன்பத்துப்பால் · கற்பியல் · பசப்புறு பருவரல்

குறள் 1187பசப்புறு பருவரல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்அள்ளிக்கொள் வற்றே பசப்பு.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

தழுவிக் கிடந்தேன்; சற்றுத் தள்ளிப் படுத்தேன்; அவ்வளவுதான்; என்னை அள்ளிக் கொண்டு விட்டதே பசலை நிறம்!

மூலம் · அச்சுப் பக்கம் 242 · ஸ்கேன் 275 · மூலமும் சான்றும்