இன்பத்துப்பால் · கற்பியல் · கனவுநிலை உரைத்தல்

குறள் 1212கனவுநிலை உரைத்தல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

கயலுண்கண் யானிரப்பத் துஞ்சின் கலந்தார்க்குஉயலுண்மை சாற்றுவேன் மன்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

நான் வேண்டுவதற்கு இணங்கி என் மை எழுதிய கயல் விழிகள் உறங்கிடுமானால், அப்போது என் கனவில் வரும் காதலர்க்கு நான் இன்னமும் உயிரோடு இருப்பதைச் சொல்லுவேன்.

மூலம் · அச்சுப் பக்கம் 247 · ஸ்கேன் 280 · மூலமும் சான்றும்