இன்பத்துப்பால் · கற்பியல்
116. பிரிவு ஆற்றாமை
குறள் 1151–1160
- குறள் 1151செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்வல்வரவு வாழ்வார்க் குரை.
- குறள் 1152இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்புன்கண் உடைத்தால் புணர்வு.
- குறள் 1153அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்பிரிவோ ரிடத்துண்மை யான்.
- குறள் 1154அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்தேறியார்க் குண்டோ தவறு.
- குறள் 1155ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்நீங்கின் அரிதால் புணர்வு.
- குறள் 1156பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர்நல்குவர் என்னும் நசை.
- குறள் 1157துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கைஇறைஇறவா நின்ற வளை.
- குறள் 1158இன்னா தினனில்லூர் வாழ்தல் அதனினும்இன்னா தினியார்ப் பிரிவு.
- குறள் 1159தொடிற்சுடின் அல்லது காமநோய் போலவிடிற்சுடல் ஆற்றுமோ தீ.
- குறள் 1160அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்பின்இருந்து வாழ்வார் பலர்.