இன்பத்துப்பால் · கற்பியல்

117. படர்மெலிந்து இரங்கல்

குறள் 11611170
  1. குறள் 1161
    மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்குஊற்றுநீர் போல மிகும்.
  2. குறள் 1162
    கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்குரைத்தலும் நாணுத் தரும்.
  3. குறள் 1163
    காமமும் நாணும் உயிர்காவாத் தூங்குமென்நோனா உடம்பின் அகத்து.
  4. குறள் 1164
    காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்ஏமப் புணைமன்னும் இல்.
  5. குறள் 1165
    துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவுநட்பினுள் ஆற்று பவர்.
  6. குறள் 1166
    இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்துன்பம் அதனிற் பெரிது.
  7. குறள் 1167
    காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்யாமத்தும் யானே உளேன்.
  8. குறள் 1168
    மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திராஎன்னல்ல தில்லை துணை.
  9. குறள் 1169
    கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள்நெடிய கழியும் இரா.
  10. குறள் 1170
    உள்ளம்போன் றுள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்நீந்தல மன்னோவென் கண்.