இன்பத்துப்பால் · கற்பியல் · படர்மெலிந்து இரங்கல்

குறள் 1163படர்மெலிந்து இரங்கல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

காமமும் நாணும் உயிர்காவாத் தூங்குமென்நோனா உடம்பின் அகத்து.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

பிரிவைத் தாங்கமுடியாது உயிர் துடிக்கும் என் உடலானது, ஒருபுறம் காதல் நோயும் மறுபுறம் அதனை வெளியிட முடியாத நாணமும் கொண்டு காவடி போல விளங்குகிறது.

மூலம் · அச்சுப் பக்கம் 237 · ஸ்கேன் 270 · மூலமும் சான்றும்