இன்பத்துப்பால் · களவியல்
115. அலர் அறிவுறுத்தல்
குறள் 1141–1150
- குறள் 1141அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்பலரறியார் பாக்கியத் தால்.
- குறள் 1142மலரன்ன கண்ணாள் அருமை அறியாதலரெமக் கீந்ததிவ் வூர்.
- குறள் 1143உறாஅதோ ஊரறிந்த கெளவை அதனைப்பெறாஅது பெற்றன்ன நீர்த்து.
- குறள் 1144கவ்வையாற் கவ்விது காமம் அதுவின்றேல்தவ்வென்னும் தன்மை இழந்து.
- குறள் 1145களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்வெளிப்படுந் தோறும் இனிது.
- குறள் 1146கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்திங்களைப் பாம்புகொண் டற்று.
- குறள் 1147ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல்நீராக நீளுமிந் நோய்.
- குறள் 1148நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால்காமம் நுதுப்பேம் எனல்.
- குறள் 1149அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம் என்றார்பலர்நாண நீத்தக் கடை.
- குறள் 1150தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்கெளவை எடுக்குமிவ் வூர்.