இன்பத்துப்பால் · களவியல்

114. நாணுத் துறவுரைத்தல்

குறள் 11311140
  1. குறள் 1131
    காமம் உழந்து வருந்தினார்க் கேமமடலல்ல தில்லை வலி.
  2. குறள் 1132
    நோனா உடம்பும் உயிரும் மடலேறும்நாணினை நீக்கி நிறுத்து.
  3. குறள் 1133
    நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்காமுற்றார் ஏறும் மடல்.
  4. குறள் 1134
    காமக் கடும்புனல் உய்க்குமே நாணொடுநல்லாண்மை என்னும் புணை.
  5. குறள் 1135
    தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடுமாலை உழக்கும் துயர்.
  6. குறள் 1136
    மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்றபடலொல்லா பேதைக்கென் கண்.
  7. குறள் 1137
    கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்பெண்ணிற் பெருந்தக்க தில்.
  8. குறள் 1138
    நிறையரியர் மன்னளியர் என்னாது காமம்மறையிறந்து மன்று படும்.
  9. குறள் 1139
    அறிகிலார் எல்லாரும் என்றேயென் காமம்மறுகின் மறுகும் மருண்டு.
  10. குறள் 1140
    யாம்கண்ணிற் காண நகுப அறிவில்லார்யாம்பட்ட தாம்படா ஆறு.