இன்பத்துப்பால் · களவியல் · நாணுத் துறவுரைத்தல்

குறள் 1132நாணுத் துறவுரைத்தல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

நோனா உடம்பும் உயிரும் மடலேறும்நாணினை நீக்கி நிறுத்து.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

எனது உயிரும், உடலும் காதலியின் பிரிவைத் தாங்க முடியாமல் தவிப்பதால், நாணத்தைப் புறந்தள்ளிவிட்டு மடலூர்வதற்குத் துணிந்து விட்டேன்.

மூலம் · அச்சுப் பக்கம் 231 · ஸ்கேன் 264 · மூலமும் சான்றும்