இன்பத்துப்பால் · களவியல்

113. காதற் சிறப்புரைத்தல்

குறள் 11211130
  1. குறள் 1121
    பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழிவாலெயி றூறிய நீர்.
  2. குறள் 1122
    உடம்பொ டுயிரிடை என்னமற் றன்னமடந்தையொ டெம்மிடை நட்பு.
  3. குறள் 1123
    கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்திருநுதற் கில்லை யிடம்.
  4. குறள் 1124
    வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்அதற்கன்னள் நீங்கும் இடத்து.
  5. குறள் 1125
    உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்ஒள்ளமர்க் கண்ணாள் குணம்.
  6. குறள் 1126
    கண்ணுள்ளிற் போகார் இமைப்பிற் பருவரார்நுண்ணியரெம் காத லவர்.
  7. குறள் 1127
    கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்எழுதேம் கரப்பாக் கறிந்து.
  8. குறள் 1128
    நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்அஞ்சுதும் வேபாக் கறிந்து.
  9. குறள் 1129
    இமைப்பிற் கரப்பாக் கறிவல் அனைத்திற்கேஏதிலர் என்னுமிவ் வூர்.
  10. குறள் 1130
    உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்ஏதிலர் என்னுமிவ் வூர்.