குறள் 1128 — காதற் சிறப்புரைத்தல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்அஞ்சுதும் வேபாக் கறிந்து.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
சூடான பண்டத்தைச் சாப்பிட்டால் நெஞ்சுக்குள் இருக்கின்ற காதலருக்குச் சுட்டுவிடும் என்று அஞ்சுகின்ற அளவுக்கு நெஞ்சோடு நெஞ்சாகக் கலந்திருப்பவர்களே காதலர்களாவார்கள்.
மூலம் · அச்சுப் பக்கம் 230 · ஸ்கேன் 263 · மூலமும் சான்றும்