குறள் 1129 — காதற் சிறப்புரைத்தல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
இமைப்பிற் கரப்பாக் கறிவல் அனைத்திற்கேஏதிலர் என்னுமிவ் வூர்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
கண்ணுக்குள் இருக்கும் காதலர் மறைவார் என அறிந்து கண்ணை இமைக்காமல் இருக்கின்றேன்; அதற்கே இந்த ஊர் தூக்கமில்லாத துன்பத்தை எனக்குத் தந்த அன்பில்லாதவர் என்று அவரைக் கூறும்.
மூலம் · அச்சுப் பக்கம் 230 · ஸ்கேன் 263 · மூலமும் சான்றும்