இன்பத்துப்பால் · களவியல்

112. நலம் புனைந்து உரைத்தல்

குறள் 11111120
  1. குறள் 1111
    நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்மென்னீரள் யாம்வீழ் பவள்.
  2. குறள் 1112
    மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்பலர்காணும் பூவொக்கும் என்று.
  3. குறள் 1113
    முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு.
  4. குறள் 1114
    காணின் குவளை கவிழ்ந்து நிலனோக்கும்மாணிழை கண்ணொவ்வேம் என்று.
  5. குறள் 1115
    அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்குநல்ல படாஅ பறை.
  6. குறள் 1116
    மதியும் மடந்தை முகனும் அறியாபதியின் கலங்கிய மீன்.
  7. குறள் 1117
    அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போலமறுவுண்டோ மாதர் முகத்து.
  8. குறள் 1118
    மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்காதலை வாழி மதி.
  9. குறள் 1119
    மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்பலர்காணத் தோன்றல் மதி.
  10. குறள் 1120
    அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்அடிக்கு நெருஞ்சிப் பழம்.