இன்பத்துப்பால் · களவியல் · நலம் புனைந்து உரைத்தல்

குறள் 1114நலம் புனைந்து உரைத்தல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

காணின் குவளை கவிழ்ந்து நிலனோக்கும்மாணிழை கண்ணொவ்வேம் என்று.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

என் காதலியைக் குவளை மலர்கள் காண முடிந்தால், “இவள் கண்களுக்கு நாம் ஒப்பாக முடியவில்லையே!” எனத் தலைகுனிந்து நிலம் நோக்கும்.

மூலம் · அச்சுப் பக்கம் 227 · ஸ்கேன் 260 · மூலமும் சான்றும்