இன்பத்துப்பால் · களவியல்
111. புணர்ச்சி மகிழ்தல்
குறள் 1101–1110
- குறள் 1101கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும்ஒண்டொடி கண்ணே உள.
- குறள் 1102பிணிக்கு மருந்து பிறமன் அணியிழைதன்நோய்க்குத் தானே மருந்து.
- குறள் 1103தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்தாமரைக் கண்ணான் உலகு.
- குறள் 1104நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்தீயாண்டுப் பெற்றாள் இவள்.
- குறள் 1105வேட்ட பொழுதின் அவையவை போலுமேதோட்டார் கதுப்பினாள் தோள்.
- குறள் 1106உறுதோ றுயிர்தளிர்ப்பத் தீண்டலாற் பேதைக்கமிழ்தின் இயன்றன தோள்.
- குறள் 1107தம்மில் இருந்து தமதுபாத் துண்டற்றால்அம்மா அரிவை முயக்கு.
- குறள் 1108வீழும் இருவர்க் கினிதே வளியிடைபோழப் படாஅ முயக்கு.
- குறள் 1109ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்கூடியார் பெற்ற பயன்.
- குறள் 1110அறிதோ றறியாமை கண்டற்றால் காமம்செறிதோறும் சேயிழை மாட்டு.