பொருட்பால் · குடியியல்

107. இரவச்சம்

குறள் 10611070
  1. குறள் 1061
    கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்இரவாமை கோடி உறும்.
  2. குறள் 1062
    இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்துகெடுக உலகியற்றி யான்.
  3. குறள் 1063
    இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும்வன்மையின் வன்பாட்ட தில்.
  4. குறள் 1064
    இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக்காலும் இரவொல்லாச் சால்பு.
  5. குறள் 1065
    தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்ததுண்ணலின் ஊங்கினிய தில்.
  6. குறள் 1066
    ஆவிற்கு நீரென் றிரப்பினும் நாவிற்கிரவின் இளிவந்த தில்.
  7. குறள் 1067
    இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பிற்கரப்பார் இரவன்மின் என்று.
  8. குறள் 1068
    இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்பார்தாக்கப் பக்கு விடும்.
  9. குறள் 1069
    இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ளஉள்ளதூஉம் இன்றிக் கெடும்.
  10. குறள் 1070
    கரப்பவர்க் கியாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர்சொல்லாடப் போஒம் உயிர்.