பொருட்பால் · குடியியல்
106. இரவு
குறள் 1051–1060
- குறள் 1051இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின்அவர்பழி தம்பழி அன்று.
- குறள் 1052இன்பம் ஒருவற் கிரத்தல் இரந்தவைதுன்பம் உறாஅ வரின்.
- குறள் 1053கரப்பிலா நெஞ்சிற் கடனறிவார் முன்னின்றிரப்புமோர் ஏஎர் உடைத்து.
- குறள் 1054இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்கனவிலும் தேற்றாதார் மாட்டு.
- குறள் 1055கரப்பிலார் வையகத் துண்மையாற் கண்ணின்றிரப்பவர் மேற்கொள் வது.
- குறள் 1056கரப்பிடும்பை யில்லாரைக் காணின் நிரப்பிடும்பையெல்லா மொருங்கு கெடும்.
- குறள் 1057இகழ்ந்தெள்ளா தீவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்உள்ளுள் உவப்ப துடைத்து.
- குறள் 1058இரப்பாரை யில்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்மரப்பாவை சென்றுவந் தற்று.
- குறள் 1059ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள்மேவார் இலாஅக் கடை.
- குறள் 1060இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பைதானேயும் சாலும் கரி.