பொருட்பால் · குடியியல் · இரவு

குறள் 1057இரவு

திருவள்ளுவர் இயற்றிய குறள்

இகழ்ந்தெள்ளா தீவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்உள்ளுள் உவப்ப துடைத்து.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

இழித்துப் பேசாமலும், ஏளனம் புரியாமலும் வழங்கிடும் வள்ளல் தன்மை உடையவர்களைக் காணும்போது, இரப்போர் உள்ளம் மகிழ்ச்சியால் இன்புறும்.

மூலம் · அச்சுப் பக்கம் 214 · ஸ்கேன் 247 · மூலமும் சான்றும்