பொருட்பால் · குடியியல்

108. கயமை

குறள் 10711080
  1. குறள் 1071
    மக்களே போல்வர் கயவர் அவரன்னஒப்பாரி யாங்கண்ட தில்.
  2. குறள் 1072
    நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்நெஞ்சத் தவலம் இலர்.
  3. குறள் 1073
    தேவர் அனையர் கயவர் அவருந்தாம்மேவன செய்தொழுக லான்.
  4. குறள் 1074
    அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்.
  5. குறள் 1075
    அச்சமே கீழ்கள தாசாரம் எச்சம்அவாவுண்டேல் உண்டாம் சிறிது.
  6. குறள் 1076
    அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்டமறைபிறர்க் குய்த்துரைக்க லான்.
  7. குறள் 1077
    ஈங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்குங்கூன்கையர் அல்லா தவர்க்கு.
  8. குறள் 1078
    சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்கொல்லப் பயன்படும் கீழ்.
  9. குறள் 1079
    உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்வடுக்காண வற்றாகும் கீழ்.
  10. குறள் 1080
    எற்றிற் குரியர் கயவரொன் றுற்றக்கால்விற்றற் குரியர் விரைந்து.