பொருட்பால் · குடியியல் · கயமை

குறள் 1071கயமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

மக்களே போல்வர் கயவர் அவரன்னஒப்பாரி யாங்கண்ட தில்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

குணத்தில் ஒருவர் கயவராக இருப்பார். ஆனால், நல்லவரைப் போலக் காட்டிக் கொள்வார். மனிதர்களிடம் மட்டும்தான் இப்படி இருவகையான நிலைகளை ஒரே உருவத்தில் காண முடியும்.

மூலம் · அச்சுப் பக்கம் 217 · ஸ்கேன் 250 · மூலமும் சான்றும்