இன்பத்துப்பால் · களவியல்

109. தகை அணங்குறுத்தல்

குறள் 10811090
  1. குறள் 1081
    அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழைமாதர்கொல் மாலுமென் நெஞ்சு.
  2. குறள் 1082
    நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்குதானைக்கொண் டன்ன துடைத்து.
  3. குறள் 1083
    பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்பெண்டகையால் பேரமர்க் கட்டு.
  4. குறள் 1084
    கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்பேதைக் கமர்த்தன கண்.
  5. குறள் 1085
    கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்நோக்கமிம் மூன்றும் உடைத்து.
  6. குறள் 1086
    கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்செய்யல மன்இவள் கண்.
  7. குறள் 1087
    கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்படாஅ முலைமேல் துகில்.
  8. குறள் 1088
    ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்நண்ணாரும் உட்குமென் பீடு.
  9. குறள் 1089
    பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கணியெவனோ ஏதில தந்து.
  10. குறள் 1090
    உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்கண்டார் மகிழ்செய்தல் இன்று.