பொருட்பால் · குடியியல் · கயமை

குறள் 1078கயமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்கொல்லப் பயன்படும் கீழ்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

குறைகளைச் சொன்னவுடனே சான்றோரிடம் கோரிய பயனைப் பெற முடியும்; ஆனால் கயவரிடமோ கரும்பை நசுக்கிப் பிழிவது போல், போராடித்தான் கோரிய பயனைப் பெற முடியும்.

மூலம் · அச்சுப் பக்கம் 218 · ஸ்கேன் 251 · மூலமும் சான்றும்