பொருட்பால் · குடியியல்
103. குடிசெயல் வகை
குறள் 1021–1030
- குறள் 1021கருமம் செயவொருவன் கைதூவேன் என்னும்பெருமையிற் பீடுடைய தில்.
- குறள் 1022ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனவிரண்டின்நீள்வினையான் நீளும் குடி.
- குறள் 1023குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்மடிதற்றுத் தான்முந் துறும்.
- குறள் 1024சூழாமல் தானே முடிவெய்தும் தங்குடியைத்தாழாது உஞற்று பவர்க்கு.
- குறள் 1025குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்சுற்றமாச் சுற்றும் உலகு.
- குறள் 1026நல்லாண்மை என்ப தொருவற்குத் தான்பிறந்தஇல்லாண்மை ஆக்கிக் கொளல்.
- குறள் 1027அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்ஆற்றுவார் மேற்றே பொறை.
- குறள் 1028குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்துமானங் கருதக் கெடும்.
- குறள் 1029இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்குற்ற மறைப்பான் உடம்பு.
- குறள் 1030இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும்நல்லாள் இலாத குடி.