பொருட்பால் · குடியியல் · குடிசெயல் வகை

குறள் 1021குடிசெயல் வகை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

கருமம் செயவொருவன் கைதூவேன் என்னும்பெருமையிற் பீடுடைய தில்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

உரிய கடமையைச் செய்வதில் சோர்வு காணாமல் எவனொருவன் முயற்சிகளை விடாமல் மேற்கொள்கிறானோ அந்தப் பெருமைக்கு மேலாக வேறொரு பெருமை கிடையாது.

மூலம் · அச்சுப் பக்கம் 207 · ஸ்கேன் 240 · மூலமும் சான்றும்