பொருட்பால் · குடியியல்

102. நாணுடைமை

குறள் 10111020
  1. குறள் 1011
    கருமத்தால் நாணுதல் நாணுத் திருநுதல்நல்லவர் நாணுப் பிற.
  2. குறள் 1012
    ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்லநாணுடைமை மாந்தர் சிறப்பு.
  3. குறள் 1013
    ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாணென்னும்நன்மை குறித்தது சால்பு.
  4. குறள் 1014
    அணியன்றோ நாணுடைமை சான்றோர்க் கஃதின்றேற்பிணியன்றோ பீடு நடை.
  5. குறள் 1015
    பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்குறைபதி என்னும் உலகு.
  6. குறள் 1016
    நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்பேணலர் மேலா யவர்.
  7. குறள் 1017
    நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்நாண்துறவார் நாணாள் பவர்.
  8. குறள் 1018
    பிறர்நாணத் தக்கது தானாணா னாயின்அறநாணத் தக்க துடைத்து.
  9. குறள் 1019
    குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்நாணின்மை நின்றக் கடை.
  10. குறள் 1020
    நாணகத் தில்லார் இயக்கம் மரப்பாவைநாணால் உயிர்மருட்டி அற்று.