பொருட்பால் · குடியியல்
101. நன்றியில் செல்வம்
குறள் 1001–1010
- குறள் 1001வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்செத்தான் செயக்கிடந்த தில்.
- குறள் 1002பொருளானாம் எல்லாமென் றீயா திவறும்மருளானாம் மாணாப் பிறப்பு.
- குறள் 1003ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்தோற்றம் நிலக்குப் பொறை.
- குறள் 1004எச்சமென் றென்னெண்ணுங் கொல்லோ ஒருவரால்நச்சப் படாஅ தவன்.
- குறள் 1005கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க் கடுக்கியகோடியுண் டாயினும் இல்.
- குறள் 1006ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்றீத லியல்பிலா தான்.
- குறள் 1007அற்றார்க்கொன் றாற்றாதான் செல்வம் மிகநலம்பெற்றாள் தமியள்மூத் தற்று.
- குறள் 1008நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்நச்சு மரம்பழுத் தற்று
- குறள் 1009அன்பொரீஇத் தற்செற் றறநோக்கா தீட்டியஒண்பொருள் கொள்வார் பிறர்.
- குறள் 1010சீருடைச் செல்வர் சிறுதுனி மாரிவறங்கூர்ந் தனைய துடைத்து.