குறள் 1017 — நாணுடைமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்நாண்துறவார் நாணாள் பவர்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நாண உணர்வுடையவர்கள் மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள உயிரையும் விடுவார்கள். உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மானத்தை விடமாட்டார்கள்.
மூலம் · அச்சுப் பக்கம் 206 · ஸ்கேன் 239 · மூலமும் சான்றும்