பொருட்பால் · குடியியல்

104. உழவு

குறள் 10311040
  1. குறள் 1031
    சுழன்றும் ஏர்ப் பின்ன துலகம் அதனால்உழந்தும் உழவே தலை.
  2. குறள் 1032
    உழுவார் உலகத்தார்க் காணியஃ தாற்றாதெழுவாரை எல்லாம் பொறுத்து.
  3. குறள் 1033
    உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்தொழுதுண்டு பின்செல் பவர்.
  4. குறள் 1034
    பல்குடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்அலகுடை நீழ லவர்.
  5. குறள் 1035
    இரவார் இரப்பார்க்கொன் றீவர் கரவாதுகைசெய்தூண் மாலை யவர்.
  6. குறள் 1036
    உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்விட்டேமென் பார்க்கும் நிலை.
  7. குறள் 1037
    தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்வேண்டாது சாலப் படும்.
  8. குறள் 1038
    ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்நீரினும் நன்றதன் காப்பு.
  9. குறள் 1039
    செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்தில்லாளின் ஊடி விடும்.
  10. குறள் 1040
    இலமென் றசைஇ இருப்பாரைக் காணின்நிலமென்னும் நல்லாள் நகும்.