பொருட்பால் · குடியியல்
97. மானம்
குறள் 961–970
- குறள் 961இன்றி அமையாச் சிறப்பின் ஆயினும்குன்ற வருப விடல்.
- குறள் 962சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடுபேராண்மை வேண்டு பவர்.
- குறள் 963பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறியசுருக்கத்து வேண்டும் உயர்வு.
- குறள் 964தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்நிலையின் இழிந்தக் கடை.
- குறள் 965குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவகுன்றி அனைய செயின்.
- குறள் 966புகழின்றால் புத்தேணாட் டுய்யாதால் என்மற்றிகழ்வார்பின் சென்று நிலை.
- குறள் 967ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையேகெட்டான் எனப்படுதல் நன்று.
- குறள் 968மருந்தோமற் றூனோம்பும் வாழ்க்கை பெருந்தகைமைபீடழிய வந்த இடத்து.
- குறள் 969மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்உயிர்நீப்பர் மானம் வரின்.
- குறள் 970இளிவரின் வாழாத மானம் உடையார்ஒளிதொழு தேத்தும் உலகு.