பொருட்பால் · குடியியல்

96. குடிமை

குறள் 951960
  1. குறள் 951
    இற்பிறந்தார் கண்ணல்ல தில்லை இயல்பாகச்செப்பமும் நாணும் ஒருங்கு.
  2. குறள் 952
    ஒழுக்கமும் வாய்மையும் நாணுமிம் மூன்றும்இழுக்கார் குடிப்பிறந் தார்.
  3. குறள் 953
    நகையீகை இன்சொல் இகழாமை நான்கும்வகையென்ப வாய்மைக் குடிக்கு.
  4. குறள் 954
    அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்குன்றுவ செய்தல் இலர்.
  5. குறள் 955
    வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடிபண்பின் தலைப்பிரிதல் இன்று.
  6. குறள் 956
    சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்றகுலம்பற்றி வாழ்துமென் பார்.
  7. குறள் 957
    குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்மதிக்கண் மறுப்போல் உயர்ந்து.
  8. குறள் 958
    நலத்தின் கண் நாரின்மை தோன்றின் அவனைக்குலத்தின் கண் ஐயப் படும்.
  9. குறள் 959
    நிலத்திற் கிடந்தமை கால்காட்டும் காட்டும்குலத்திற் பிறந்தார்வாய்ச் சொல்.
  10. குறள் 960
    நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம்வேண்டின்வேண்டுக யார்க்கும் பணிவு.